Published : 11 Dec 2018 09:40 AM
Last Updated : 11 Dec 2018 09:40 AM
தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி 12 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளதாக அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் சந்திரசேகர் ராவ் 2,861 வாக்குகளில் முன்னிலை பெற்றுள்ளார்.
தெலங்கானாவில் உள்ள 119 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் கடந்த 7-ம் தேதி நடந்தது. இந்தத் தேர்தலில் ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி, காங்கிரஸ், தெலுங்கு தேசம், பாஜக இடையே கடும் போட்டி நிலவியது. இந்நிலையில், தேர்தல் முடிந்த நிலையில், வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன.
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் டிஆர்எஸ் கட்சியே முன்னிலை பெற்று வந்தது, 2-வது இடத்தில் காங்கிரஸ் கட்சி இருந்தது. அதன்பின் வாக்கு எந்திரங்கள் சீல் உடைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது.
இதில் டிஆர்எஸ் கட்சியின் மூத்த தலைவரும் சித்திப்பேட்டையில் போட்டியிட்ட டி ஹரிஸ் ராவ் மூன்றாம் சுற்று முடிவில், 13 ஆயிரத்து 40 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
ஜஹிராபாத்தில் டிஆர்எஸ் வேட்பாளர் மாணிக் ராவ் 738 வாக்குகள் முன்னிலையில் உள்ளார். தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் கஜேவால் தொகுதியில் போட்டியிட்டார். முதல் சுற்று முடிவில், சந்திரசேகர் ராவ் 2,861 வாக்குகள் முன்னிலையில் உள்ளார். ஒட்டுமொத்தமாக தற்போது டிஆர்எஸ் கட்சி 12 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது என அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT