Published : 10 Dec 2018 11:45 AM
Last Updated : 10 Dec 2018 11:45 AM
பெங்களூருவில் தாயை மகன் தாக்கும் வீடியோ ஒன்று வைராலாகி கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தாயை தாக்கிய நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
பெங்களூருவில் தாயை தனது சொந்த மகனே தாக்கும் வீடியோ ஒன்று சனிக்கிழமையன்று சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருந்தது. அந்த வீடியோவில் மகன், தனது தாயை வீட்டுக்கு உபயோகப்படும் துடைப்பத்தால் தாக்குகிறார். “ தன்னைப் பற்றி இனி அக்கப்பக்கத்தினருடன் பேசுவியா? என்று கூறிக் கொண்டே தனது தாயை அடிக்கிறார் அந்த மகன். வலி தாங்க முடியாமல் அவரது தாயார் அழுகிறார். இந்த நிலையில் தாக்கிய அந்த இளைஞர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இதுகுறித்து பெங்களூரு போலீஸார் தெரிவிக்கையில் ‘‘தாயை தாக்கிய அந்த நபரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்படுவதற்கு முன்னர் அவர் தனது செயலுக்கு தன் தாயிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். வருங்கால்த்தில் இனி இவ்வாறு நடக்காது என்றும் அவர் தெரிவித்தார்” என்று கூறியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT