Published : 20 Nov 2018 01:47 PM
Last Updated : 20 Nov 2018 01:47 PM
மத்தியப் பிரதேசத்தில் ஓட்டு கேட்டு வந்த பாஜக வேட்பாளருக்கு இளைஞர் செருப்பு மாலை அணிவித்தார். சம்பந்தப்பட்ட வேட்பாளர் அவரை சரமாரியாகத் தாக்கினார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் வரும் 28-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. இங்கு கடந்த 2003-ம் ஆண்டில் இருந்து பாஜக ஆட்சி செய்து வருகிறது. அங்கு முதல்வராக சிவராஜ் சவுகான் இருந்து வருகிறார்.
தேர்தலை ஒட்டி, 10 நாட்களுக்கு முன்பாக தேர்தல் அறிக்கையை பாஜக வெளியிட்டது. அதில் ஆண்டுக்கு 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று பாஜக உறுதியளித்துள்ளது. மேலும் பெண்கள், விவசாயிகள், குழந்தைகள், இளைஞர்கள், வர்த்தகர்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோருக்கு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதைத் தொடர்ந்து பாஜக வேட்பாளர்கள் மும்முரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் நகாடா மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏவும் வேட்பாளருமான திலிப் ஷேகாவாத் மக்களைச் சந்தித்து வாக்கு கேட்டு வந்தார். பொதுமக்கள் அவருக்கு பூமாலை அணிவித்தனர்.
அப்போது திடீரென இளைஞர் ஒருவர் திலீப்புக்கு செருப்புகள் கோக்கப்பட்ட மாலையை அணிவித்தார். எதிர்பாராத இந்தச் சம்பவத்தால் ஆத்திரமும் அதிர்ச்சியும் அடைந்த பாஜக வேட்பாளர், செருப்பு மாலையை உடனடியாகக் கழற்றி எறிந்தார். அத்துடன் இளைஞரைச் சரமாரியாகத் தாக்கினார்.
இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
வீடியோவைக் காண
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT