Published : 19 Nov 2018 02:06 PM
Last Updated : 19 Nov 2018 02:06 PM
காங்கிரஸ் கட்சி குடும்ப நிறுவனமாக மாறிவிட்டதாகவும் நேரு குடும்பத்தைச் சேராத காங்கிரஸ் தலைவர்களுக்கு அவமானமே ஏற்பட்டதாகவும் பாஜக தலைவர் அமித் ஷா தலைவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ''இந்திரா காங்கிரஸின் ஆரம்ப காலமான 1978-ம் ஆண்டில் இருந்து நீண்ட ஆண்டுகளுக்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர்தான் காங்கிரஸின் தலைவராக இருந்துள்ளனர்.
இதன்மூலம் காங்கிரஸ் கட்சி ஒரு குடும்ப நிறுவனமாக மாறிவிட்டது. அரசியல் கட்சியாக பொதுமக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் மாறி, ஒரு பரம்பரைக்கு சேவையாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் காங்கிரஸ் குடும்பம் செயல்பட்டு வருகிறது.
அவமரியாதைக்கு ஆளான காங்கிரஸ் தலைவர்கள்
நேரு குடும்பத்தைச் சேராத காங்கிரஸ் தலைவர்களுக்கு அவமரியாதையே உண்டானது. நரசிம்ம ராவ், சீதாராம் கேசரி, பாபு ஜெகஜீவன் ராம், நிஜலிங்கப்பா, காமராசர் போன்ற அக்கட்சியின் தலைவர்கள், நேரு குடும்பத்தினரால் அவமதிப்புக்கு ஆளாகினர். தேபர், ஆச்சார்யா க்ருபாளினி, நீலம் சஞ்சீவ ரெட்டி ஆகியோரும் இதில் அடக்கம்'' என்று தெரிவித்துள்ளார் அமித் ஷா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT