Last Updated : 17 Oct, 2018 12:34 PM

 

Published : 17 Oct 2018 12:34 PM
Last Updated : 17 Oct 2018 12:34 PM

ஸ்மார்ட் போன் ஆர்டர் செய்தவருக்கு செங்கல்லை அனுப்பிய ஆன்லைன் நிறுவனம்: அவுரங்காபாத்தில் அதிர்ச்சி

ஆன்லைன் நிறுவனமொன்றில் ஸ்மார்ட் போன் ஆர்டர் செய்தவருக்கு செங்கல் அனுப்பப்பட்டதால், அதிர்ச்சியடைந்த வாலிபர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த சம்பவம் அவுரங்காபாத்தில் நிகழ்ந்துள்ளது.

அங்குள்ள ஊரக வளர்ச்சித்துறை குடியிருப்பில் வசித்து வருபவர் கஜனன் காரத். இவர் அக்டோபர் 9-ம் தேதி பிரபல ஆன்லைன் தளத்தில் ரூ.9,134 செலுத்தி ஸ்மார்ட் போனை ஆர்டர் செய்துள்ளார். அவருக்கு ஒரு வாரத்துக்குள் போன் டெலிவரி செய்யப்படும் என்று செய்தி வந்துள்ளது.

இதனையடுத்து அக்டோபர் 7-ம் தேதி பார்சல் வந்துள்ளது.

அதனைப் பிரித்து பார்த்த காரத் அதிர்ச்சி அடைந்தார். அதில் ஸ்மார்ட் போனுக்குப் பதிலாக செங்கல் இருந்தது.

பார்சலைக் கொண்டு வந்த நபரிடம் இதுகுறித்துக் கேட்டபோது, கொரியரைக் கொண்டு சேர்ப்பது மட்டுமே தனது வேலை; உள்ளே இருப்பது குறித்துத் தனக்குத் தெரியாது என்று தெரிவித்துள்ளார்ட.

இதனால் அருகில் உள்ள ஹர்சுல் காவல் நிலையத்தில் காரத் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து மோசடி வழக்கில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ஆய்வாளர் மணிஷ் கல்யாண்கர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x