Published : 05 Oct 2018 01:12 PM
Last Updated : 05 Oct 2018 01:12 PM
வானில் பறந்துகொண்டிருந்த இந்திய விமானப்படையின் விமானம் ஒன்று கரும்புத் தோட்டத்தில் விழுந்தது. இதில் இரு பயணித்த விமானிகள் உயிர் தப்பினர்.
உத்தரப் பிரதேசம் பாக்பத் மாவட்டத்தில் இன்று காலை இந்திய விமானப் படையின் சிறிய ரக விமானம் ஒன்று வானில் பறந்துகொண்டிருந்தது. திடீரென ஏற்பட்ட என்ஜின் கோளாறினால் திடீரென அது தாறுமாறாக பறந்தது.
இதனால் அதில் பறந்துகொண்டிருந்த இரு விமானிகளும் உடனே எச்சரிக்கை அடைந்தனர். பாராசூட்டை அணிந்துகொண்டு அங்கிருந்து கீழு குதித்தனர். சிறிது தூரம் தாறுமாறாக பறந்த விமானம் பின்னர் கரும்புத் தோட்டத்தில் கீழே விழுந்தது.
விமானப்படை விமானிகளுக்கு உயிருக்கு எதுவும் ஆபத்து இல்லையெனவும் சிறு காயமும் இன்றி அவர் உயிர் தப்பியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய பாதுகாப்புத் துறைக்கென்று என்று தனியே உள்ள அதிகாரபூர்வ நபர்கள்குழு உத்தியோகபூர்வ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT