Last Updated : 26 Sep, 2018 01:36 PM

 

Published : 26 Sep 2018 01:36 PM
Last Updated : 26 Sep 2018 01:36 PM

‘பாஜக முகத்தில் விழுந்த அறை’: ஆதார் தீர்ப்புக்கு காங்கிரஸ் வரவேற்பு

ஆதார் விவரங்களைத் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கக்கூடாது என்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் ஆதார் சட்டத்தில் 57-வது பிரிவை நீக்கியது பாஜக முகத்தில் அறைந்தது போன்றதாகும் என்று காங்கிரஸ் கட்சி வரவேற்றுள்ளது.

அரசின் சலுகைகளைப் பெற ஆதார் கட்டாயமா, செல்போன், வங்கிக்கணக்கு போன்றவற்றுக்கு ஆதார் விவரங்களை அளிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடர்பட்ட 27 மனுக்கள் மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல்சாசன அமர்வு இன்று வழங்கியது.

அதில், அரசியல்சாசனச் சட்டப்பட்ட ஆதார் சட்டம் செல்லும். அரசின் சலுகைகளைப் பெற ஆதார் கார்டு அவசியம், அதேசமயம், ஆதார் கார்டு இல்லாமல் சலுகைகளை மறுக்கக்கூடாது. தனியார் நிறுவனங்கள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஆதார் விவரங்களை வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறக்கூடாது, பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்க ஆதார் கட்டாயமில்லை என்று பரபரப்பு தீர்ப்பளித்தனர்.

அது மட்டுமல்லாமல் ஆதார் சட்டத்தில் தனியார் நிறுவனங்களுக்கு ஆதார் தகவல்களை பகிர்ந்து கொள்ளும் சட்டப்பிரிவு 57-யை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த தீர்ப்புகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி ட்விட்டரில் கூறியதாவது:

ஆதார் சட்டத்தில் தனியார் நிறுவனங்களுக்கு தனிநபர்களின் ஆதார் விவரங்களை அளிக்கும் 57-வது பிரிவை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பது வரவேற்புக்குரியது. வாடிக்கையாளர்களின் விவரங்களை உறுதி செய்வதற்காக ஒருபோதும் தனியார் நிறுவனங்கள் ஆதார் விவரங்களை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது.

தனியார் நிறுவனங்கள் ஆதார் விவரங்களைப் பயன்படுத்தக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு பாஜக முகத்தில் அறைந்தது போலாகும். தனியார் நிறுவனங்கள் ஆதார் விவரங்களைக் கேட்பது சட்டவிரோதமாகும். அனைத்து பயோமெட்ரிக் விவரங்களையும் கண்காணித்து வந்தது இப்போது தோல்வி அடைந்துள்ளது. மேலும், தனிநபர் விவரங்களையும் சேமித்து வைத்திருக்கவும் நிறுவனங்களுக்கு அனுமதி மறுத்துவிட்டது உச்ச நீதிமன்றம்.

ஒருதனி மனிதரின் தனிப்பட்ட விவரங்களை வெளியிடப்பட்டால் அவர்களின் தனிப்பட்ட விவரங்களைத் தெரிந்து கொள்ள வாய்ப்பு கொடுப்பதுபோலாகும். கோடிக்கணக்கான மக்களின் தனிப்பட்ட விவரங்களை உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பின் மூலம் பாதுகாத்துள்ளது. தொடக்கத்தில் ஆதார் சட்டம் எவ்வாறு இருந்ததோ அதைவரவேற்றுள்ளது. மோடி அரசு சேர்த்து வைத்திருந்த அழுக்கு நீரைக் கீழே ஊற்றி ஆதார் குழந்தையை நீதிமன்றம் பாதுகாத்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

ஆதார் குறித்து உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை திரிணாமுல் காங்கிரஸ்கட்சியும் வரவேற்றுள்ளது. அந்த கட்சி ட்விட்டரில் வெளியிட்ட கருத்தில் கூறுகையில் ‘‘ 2016, ஆதார் சட்டத்தில் 57-வது பிரிவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததே வரவேற்கிறோம். இனிமேல், தனியார் நிறுவனங்கள் வங்கிகள், பள்ளிகள், மொபைல் நிறுவனங்கள் இனிமே ஆதார் வேண்டும் என மக்களைக் கட்டாயப்படுத்த முடியாது. திரிணாமுல் காங்கிரஸ் மம்தாபானர்ஜி ஆகியோர் இதற்காக கடுமையாகப் பாடுபட்டனர்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x