Last Updated : 26 Sep, 2018 08:30 AM

 

Published : 26 Sep 2018 08:30 AM
Last Updated : 26 Sep 2018 08:30 AM

பெங்களூருவில் கொட்டித் தீர்க்கும் கனமழை: வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் ம‌க்கள் அவதி

பெங்களூருவில் பெய்துவரும் கனமழையால் தாழ்வான இடங் களில் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

கர்நாடகாவில் அடுத்த மாதம் வ‌டகிழக்கு பருவமழை தொடங்க விருக்கும் நிலையில், இப்போதே பல்வேறு இடங்களில் கனம‌ழை பெய்து வருகிறது. மைசூரு, ஹாசன், சிக்கமகளூரு உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்துவரும் கனமழையால் தாழ்வான இடங் களில் மழை நீர் தேங்கியுள்ளது.

குடகு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கனமழையால் காவிரியில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. காவிரி கரையோர கிராமங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளதால் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே பெங்களூருவில் கடந்த சில தினங்களாக இரவில் கனமழை பெய்துவருகிறது. நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு தொடங்கி மழை விடிய விடிய கொட்டித் தீர்த்தது. இதனால் பெங்களூருவின் தெற்கு, வடக்குப் பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பன்னார்கட்டா சாலை, ஹெப்பால், ஹென்னூர் போன்ற இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வாகன நிறுத்தும் இடங்களில் வெள்ளம் புகுந்ததால் வாகனங்கள் நீரில் மிதந்தன.

இந்நிலையில் நேற்று மாலை மீண்டும் பெங்களூருவில் கன மழை பெய்தது. பலத்த காற்றுடன் மழை பெய்ததால் 30-க்கும் மேற்பட்ட சாலையோர மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. இத னால் எம்ஜி சாலை, இந்திரா நகர், அல்சூர், டொம்லூர், ஒயிட் பீல்ட் உள்ளிட்ட இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தொடர் மழை காரண மாக மக்கள் அலுவலகம் முடிந்து வீட்டுக்குச் செல்ல முடியாமல் தவித்தனர்.

பிடிஎம் லே அவுட், பத்மநாப நகர், கெங்கேரி உள்ளிட்ட இடங் களில் 100-க்கும் மேற்பட்ட வீடு களுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் மக்கள் அவதியடைந் தனர். தாழ்வான இடங்களில் தேங்கிய நீரை மோட்டார் மூலம் வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடு பட்டனர்.

இதனிடையே கர்நாடக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெங்களூருவில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பன்னார்கட்டாவில் 182.55 மிமீ மழை பதிவாகியுள்ளது. அடுத்த 48 மணி நேரத்துக்கு கனமழை தொடரும்” என எச்சரித்துள்ளது.

இதனால் பெங்களூருவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை மேற்கொள்ளுமாறு அதி காரிகளுக்கு முதல்வர் குமாரசாமி உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x