Published : 26 Sep 2018 08:10 AM
Last Updated : 26 Sep 2018 08:10 AM

ஒரு புடவை விலை ரூ.3- தெலங்கானாவில்  அலைமோதிய பெண்கள்

தெலங்கானா மாநிலம் வாரங்கலில் உள்ள ஒரு துணிக்கடையில் ஒரு புடவை ரூ.3-க்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக விளம்பரம் செய்யப்பட்டது.

இதனால், நேற்று அதிகாலை யில் அந்த துணிக்கடை திறப்ப தற்கு முன்பாகவே, நூற்றுக்கணக் கான பெண்கள் வரிசையில் காத் திருக்கத் தொடங்கினர். நேரம் செல்லச் செல்ல, கூட்டம் அதிகரித்த தால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில், நேற்று காலை 8 மணிக்கு கடை திறக்கப்பட்டது. அப்போது அங்கிருந்த பெண்கள், ஒரே சமயத்தில் கடைக்குள் நுழைய முற்பட்டனர். இதனால் அவர்களுக்கு இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் அவர்களுக்கு இடையே கைகலப்பும் உருவானது. கூட்ட நெரிசலில் சிக்கி பல பெண்கள் மயக்கமடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த வாரங் கல் போலீஸார், சம்பவ இடத்துக் குச் சென்று, நிலைமையை கட்டுப் படுத்த முயன்றனர். ஆனால், போலீஸாரால் கூட்டத்தைக் கட்டுப் படுத்த முடியவில்லை. இதை யடுத்து, அந்தத் துணிக்கடையை போலீஸார் மூடினர். மேலும், பெரும் ஆபத்தை விளைவிக்கக் கூடிய இதுபோன்ற விளம்பரங் களை செய்யக் கூடாது எனவும் கடை உரிமையாளரை போலீஸார் எச்சரித்தனர். அதன் பின்னர், கடை முன்பு திரண்டிருந்த பெண்களுக்கு அறிவுரை கூறி, அவர்களையும் போலீஸார் கலைந்து போகச் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x