Published : 24 Sep 2018 08:37 AM
Last Updated : 24 Sep 2018 08:37 AM

ரபேல் விமான ஒப்பந்தத்தை ரத்து செய்ய மாட்டோம்: அமைச்சர் அருண் ஜேட்லி திட்டவட்டம்

பிரான்ஸ் நாட்டின் ரபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி நேற்று கூறியதாவது:

ராகுல் காந்தி பழிவாங்கும் எண்ணத்தில் செயல்படுகிறார். ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் அவர் கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்துமே புனையப்பட்டவை. கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதியே ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், பாரிஸில் சில குண்டுகள் வெடிக்கப் போகின் றன. சற்று பொறுத்திருங்கள்" என்று பதிவிட்டிருந்தார்.

பிரான்ஸின் எதிர்க்கட்சியும் இந்தியாவின் எதிர்க்கட்சியும் இணைந்து செயல்படுகின்றன. இதன் பின்னணி தெரியாது. ஆனால் இருதரப்பும் இணைந்து செயல்படுவதை ராகுல் காந்தியின் ட்விட்டர் பதிவுகள் உணர்த்துகின்றன.

பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிரான்சுவா ஹாலண்டே கூறியது தவறான தகவல்கள். அதனால்தான் அடுத்த நாளே அவர் தனது கருத்தை வாபஸ் பெற்றார்.

எந்த சூழ்நிலையிலும் ரபேல் போர் விமான ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது. திட்டமிட்டபடி ரபேல் போர் விமானங்கள் இந்திய விமானப் படையில் சேர்க்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x