Published : 23 Sep 2018 08:49 AM
Last Updated : 23 Sep 2018 08:49 AM

இராக், ஆப்கானிஸ்தானுக்கு அடுத்து தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட 3-வது நாடு இந்தியா: அமெரிக்க புள்ளிவிவரத்தில் அதிர்ச்சி தகவல்

உலகளவில் தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில், தொடர்ந்து 2-வது ஆண்டாக இந்தியா 3-வது இடத்தில் இருக் கிறது என்று அமெரிக்க வெளியுறவுத் துறை புள்ளிவிவரத் தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளில் நடைபெறும் தீவிரவாத தாக்குதல்கள், பாதிப்பு கள் குறித்து அமெரிக்க வெளி யுறவுத் துறை தொடர்ந்து புள்ளி விவரங்களை சேகரித்து ஆண்டு தோறும் அறிக்கை வெளியிட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக் கான அறிக்கையை கடந்த வியாழக்கிழமை அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது:

உலகளவில் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டிய லில் இராக் முதலிடத்திலும், ஆப்கானிஸ்தான் 2-வது இடத்திலும் உள்ளன. 3-வது இடத்தில் இந்தியா உள்ளது. தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டிய லில் கடந்த ஆண்டும் இந்தியா 3-வது இடத்தில் இருந்தது. கடந்த 2015-ம் ஆண்டு வரை 3-வது இடத்தில் பாகிஸ்தான் இருந்தது.

இந்தியாவில் நடைபெறும் ஒட்டுமொத்த தீவிரவாத தாக்கு தல்களில் 53 சதவீதம் மாவோ யிஸ்டுகள் நடத்துவதாகும். மேலும், உலகளவில் பயங்கரமான தீவிர வாத அமைப்புகள் பட்டியலில் ஐஎஸ், தலிபான், அல்-ஷபாப் ஆகிய தீவிரவாத அமைப்புகளுக்கு அடுத்து 4-வது இடத்தில் மாவோ யிஸ்டுகள் அமைப்பு உள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டில் காஷ்மீரில் 24 சதவீதம் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. அந்த ஆண்டில் இந்தியாவில் மொத்தம் 860 தீவிரவாத தாக்குதல்கள் நடந்துள்ளன. இதில் காஷ்மீரில் நடந்த தாக்குதல்கள் மட்டும் 25 சதவீதமாகும்.

இவ்வாறு புள்ளிவிவர அறிக் கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய அதிகாரி கள் கூறும்போது, ‘‘தீவிரவாத விஷயத்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. இந்தியாவில் தீவிரவாதத்தில் ஈடுபடுவோர், பாகிஸ்தான் மண்ணில் இருந்து செயல்படுகின்றனர். அல்லது அங்கிருந்து ஏவிவிடப்பட்டவர்கள் செய்வது. ஆனால், பாகிஸ்தான் கடந்த பல ஆண்டுகளாக வளர்த்துவிட்ட ஆதரித்த தீவிரவாதி களே அங்கு தாக்குதல்கள் நடத்துகின்றனர்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x