Published : 23 Sep 2018 08:42 AM
Last Updated : 23 Sep 2018 08:42 AM
ராணுவ தலைமைத் தளபதி பிபின் ராவத் டெல்லியில் நேற்று நிருபர் களிடம் கூறியதாவது:
எல்லை பாதுகாப்புப் படை வீரரை பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொடூரமாக கொலை செய்துள்ளனர். அவர்களின் செயல் காட்டுமிராண்டித்தனமானது. அவர்களுக்கு அதே வலியைக் கொடுப்போம். இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவமும், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதி களும் நாச வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் பாணி யிலேயே அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும்.
தீவிரவாதமும் அமைதிப் பேச்சு வார்த்தையும் ஒரே பாதையில் பயணம் செய்ய முடியாது. தீவிர வாதத்தை நிறுத்தினால்தான் அமைதிப் பேச்சுவார்த்தையை தொடர முடியும். இதன்காரண மாகவே இந்திய, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்களின் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT