Published : 23 Sep 2018 08:40 AM
Last Updated : 23 Sep 2018 08:40 AM
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஆன்லைன் மூலம் பல்வேறு ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளை தேவஸ்தானம் வெளியிடுகிறது. இதன் மூலம் நாட்டில் உள்ள ஏராளமான பக்தர் கள் தங்களுக்கு எந்த ஆர்ஜித சேவை மூலம் ஏழுமலையானை தரிசனம் செய்ய வேண்டுமோ அந்த ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இந்நிலையில், சிலர் போலி யான ஆதார் அட்டைகள் மூலம் பக்தர்கள் என்ற போர்வையில் முன்பதிவு செய்து பெற்ற டிக்கெட்டை அதிக விலைக்கு விற்று வருவது தெரியவந்துள்ளது. மேலும், சில தரகர்கள் ஆர்ஜித டிக்கெட்டுகளையே போலியாக தயாரித்தும் பக்தர்களுக்கு விற்று விடுகின்றனர்.
இதுகுறித்து ஆய்வு செய்த தேவஸ்தான கண்காணிப்பு குழு வினர், 2,600 ஆர்ஜித சேவை டிக் கெட்டுகள் போலியாக தயாரித்து பக்தர்களுக்கு விற்றுள்ளதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ள னர். இதுகுறித்து ஆய்வு செய்ததில், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒரு கும்பல் போலி ஆன்லைன் சேவை டிக்கெட்டுகளை விற்றுள்ளது தெரியவந்துள்ளது. இதில், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவரின் மகனுக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்துவதற்காக, திருமலையில் இருந்து ஊழல் கண்காணிப்பு துறை அதிகாரிகள் கர்நாடகாவுக்கு விரைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT