Published : 22 Sep 2018 08:38 PM
Last Updated : 22 Sep 2018 08:38 PM
அசாமின் வரைவு தேசியக் குடிமக்கள் பதிவேடு குறித்து பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கூறும்போது வங்கதேசத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் கரையான்கள் போன்றவர்கள் ஒவ்வொருவரும் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று பேசியுள்ளார்.
“தேசியக் குடிமக்கள் பதிவேட்டை பாஜக அரசு கொண்டு வந்துள்ளது முதற்கட்ட கணக்குகளின் படி சுமார் 40 லட்சம் சட்டவிரோத குடியேறிகள் உள்ளனர்” என்றார்.
இந்தியாவுக்குள் ‘ஊடுருவிய’ ஒவ்வொருவரையும் பாஜக அடையாளம் காணும் என்று அமித் ஷா சவாய் மாதோபூர் மாவட்டத்தின் கங்காப்பூர் பொதுக்கூட்டத்தில் பேசினார்.
ராகுல் காந்தியை ‘ராகுல் பாபா’ என்று அழைத்த அமித் ஷா, பாஜக என்ன செய்தது என்று ராகுல் கேட்கிறார், ஆனால் மக்களோ 4 தலைமுறைகளாக அவரது குடும்பம் என்ன செய்தது என்று கேட்கிறார்கள் என்றார்.
காங்கிரஸ் ஆட்சி செய்த போது ராஜஸ்தான் ‘பிமாரு’ மாநிலமாக இருந்தது. ஆனால் வசுந்தரராஜே ஆட்சியில் முன்னேற்றம் கண்டது. மத்திய அரசும், ராஜஸ்தான் மாநில அரசும் வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுத்தது, என்றார் அமித் ஷா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT