Last Updated : 22 Sep, 2018 06:17 PM

 

Published : 22 Sep 2018 06:17 PM
Last Updated : 22 Sep 2018 06:17 PM

ரஃபேல் ஒப்பந்தம்: ரிலையனஸ் டிபன்ஸை முன்மொழியவில்லை: மத்திய அரசு மீண்டும் வலியுறுத்தல்

ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் இந்திய அரசின் விருப்பத்திற்கேற்பவே ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனத்தை இந்தியக் கூட்டாளியாக தேர்வு செய்தோம் என்று முன்னாள் பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா ஹாலண்டே என்று கூறியது பெரிய சர்ச்சைகளைக் கிளப்பியுள்ள நிலையில் மத்திய அரசு தங்களுக்கு அதில் எந்தவிதப் பங்குமில்லை என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து தேவையற்ற சர்ச்சைகள் கிளப்பப்படுகிறது என்று மத்திய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

“அரசு முன்னரும் கூறியது இப்போது மீண்டும் வலியுறுத்துகிறது ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்தில் மத்திய அரசின் பங்கு இல்லை, இது குறித்து தேவையற்ற சர்ச்சைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன” என்று அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

பிரெஞ்ச் ஊடகமான மீடியாபார்ட் பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிரான்சுவா ஹாலண்டேயை மேற்கோள் காட்டி, ரூ.58,000 கோடி ரபேல் ஒப்பந்தத்தில் டசால்ட் ஏவியேஷனின் இந்தியக் கூட்டாளியாக ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனத்தை இந்திய தரப்புதான் முன்மொழிந்தது என்று செய்தி வெளியிட்டிருந்தது.

இதனையடுத்து கடும் சர்ச்சைகள் மூண்டது, ராகுல் காந்தி பிரதமர் மோடி மீது கடும் விமர்சனங்களை முன்வைத்து பிரதமர் ஏன் மவுனம் காக்க வேண்டும், பதில் அளிப்பதுதான் முறை என்று கோரியிருந்தார்.

இந்நிலையில் பாதுகாப்பு அமைச்சகம் தங்களுக்கு எந்தவித பங்குமில்லை என்று தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x