Published : 20 Sep 2018 03:04 PM
Last Updated : 20 Sep 2018 03:04 PM

பாம்பிடம் இருந்து குட்டிகளை காக்க தீரத்துடன் போராடிய நாய்: மெய் சிலிர்க்க வைக்கும் காட்சி

 ஒடிசாவில் நல்ல பாம்பிடம் இருந்து தனது குட்டிகளை காப்பாற்ற தாய் நாய் போராடிய காட்சிகள் படங்களாக வெளியாகி வைரலாகி வருகிறது.

ஒடிசா மாநிலம் பத்ராக்கில் குடியிருப்பு பகுதிக்கு நேற்று இரவு நல்ல பாம்பு ஒன்று புகுந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் கம்புகளுடன் வந்து அந்த பாம்பை விரட்ட முயன்றனர். இதனால் அந்த பாம்பு மறைவிடம் ஒன்றை நோக்கி சென்று புதுங்கியது. இதையடுத்து மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

பாம்பு சென்ற மறைவிடப்பகுதியில் நாய் ஒன்று சமீபத்தில் குட்டிகளை ஈன்றுள்ளது. திடீரென அங்கு வந்த பாம்பை பார்த்த தாய் நாய் கடுமையாக குறைத்தது. ஏற்கெனவே மிரண்டு போய் இருந்த பாம்பு குட்டிகளை கொத்த தொடங்கியது.

இதனால் குட்டிகளை காப்பாற்றுவதற்காக தாய் தீரத்துடன் போராடியது. கடுமையாக குரைத்து பாம்பை விரட்ட முயன்றது. அப்போது அங்கு கூடிய மக்கள் இந்த காட்சியை மொபைல் போன்களில் படம் பிடித்தனர். இதற்கு வனத்துறையினர் வந்து அந்த பாம்பை பிடித்தனர்.

எனினும் பாம்பு கொத்தியதில் 4 நாய் குட்டிகள் உயிரிழந்தனர். ஒரே ஒரு குட்டி மட்டும் உயிர் பிழைத்தது. தனது குட்டிகள் இறந்து போனதை மோர்ந்து பார்ந்து உணர்ந்த தாய் கண்ணீர் வடித்தது. இதை பார்த்த மக்களும் சோகத்தில் உறைந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x