Published : 18 Sep 2018 03:01 PM
Last Updated : 18 Sep 2018 03:01 PM

உ.பி.யில் 68,500 ஆசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு: விசாரணையை முடுக்கிவிட பாஜக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

உத்தரப் பிரதேசத்தில் ஆளும் பாஜக அரசு 68 ஆயிரத்து 500 ஆசிரியர்கள் நியமனத்தில் மாபெரும் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது குறித்து நடைபெற்று வரும் விசாரணையின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்த அறிக்கையை விரைவுபடுத்தி சமர்ப்பிக்க வேண்டுமென அலகாபாத் உயர் நீதிமன்றம் இன்று வலியுறுத்தியுள்ளது.

உயர் நீதிமன்றத்தின் லக்னோ அமர்வு இன்று உதவி ஆரம்பக் கல்வி ஆசிரியர்கள் நியமனத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பான வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அப்போது இதுகுறித்து விசாரித்த நீதிபதிகள் உத்தரப் பிரதேச அரசு 68 ஆயிரத்து 500 ஆசிரியர்கள் நியமனத்தில் மாபெரும் ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டது தொடர்பாக உத்தரவிடப்பட்ட விசாரணை எந்த அளவுக்கு நடந்து வருகிறது என்று கேள்வி எழுப்பினர்.

இனியும் காலதாமதம் செய்யாமல் விரைந்து விசாரணை நடைபெறுவது குறித்த முன்னேற்ற அறிக்கையையாவது உடனடியாக சமர்ப்பிக்க வேண்டுமென நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளளனர்.

இவ்விசாரணையில் பங்கேற்ற நீதிபதி இர்ஷாத் அலி,  விசாரணையின் அடிப்படையில் தவறு செய்த அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பதையும் தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் இவ்வழக்கைப் பதிவு செய்த சோனிகா தேவி எனும் மனுதாரருக்குப் பதிலளித்த நீதிமன்றம், 68 ஆயிரத்து 500 ஆசிரியர்கள் நியமனமும் அரசு ஆணைகளுக்கு உட்பட்டதுதான் என்று தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட மனுதாரர் ஆசிரியர் நியமனத்திற்காக நடைபெற்ற எழுத்துத் தேர்வில் தனக்கு நம்பிக்கை இல்லையென்றும், தேர்வின்போது தான் எழுதிய பதில் தாளை முறையாக மறு மதிப்பீடு செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x