Published : 16 Sep 2018 09:32 AM
Last Updated : 16 Sep 2018 09:32 AM
இந்தி தினத்தையொட்டி மத்திய உள்துறை அமைச்சகம் டெல்லியில் நேற்று முன்தினம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பேசியதாவது:
நான் இளைஞனாக இருந்தபோது இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் கலந்துகொண்டேன். ஆனால் இந்தி மொழி இல்லாமல் நாட்டின் வளர்ச்சி இல்லை என்பதை பிறகு தான் உணர்ந்தேன்.
நான் டெல்லிக்கு வந்தபோது, தப்பும் தவறுமாக இந்தி மொழி யில் பேசினேன். ஆனாலும் அனை வரும் ஏற்றுக் கொண்டனர். பிரிட்டி ஷார் விட்டுச் சென்ற நோய்தான் ஆங்கிலம். தாய்மொழி அனை வருக்கும் அவசியம்.
ஒருவரது தொடக்கக் கல்வியானது தாய் மொழியில்தான் இருக்க வேண்டும். இந்தி மொழி இல்லாமல் இந்தியாவில் வளர்ச்சி என்பது சாத்தியமில்லை. இவ்வாறு அவர் பேசினார். - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT