Last Updated : 14 Sep, 2018 06:18 PM

 

Published : 14 Sep 2018 06:18 PM
Last Updated : 14 Sep 2018 06:18 PM

பெண்ணை சரமாரியாக அடித்து உதைத்த டெல்லி போலீஸ் அதிகாரியின் மகன் கைது: வைரலாகும் வீடியோ

டெல்லி காவல்துறையின் உதவி துணை ஆய்வாளர் அசோக் குமாரின் மகன் ரோஹித் குமார் தோமர், இரண்டு பெண்களைக் காயப்படுத்தியதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக, ரோஹித் தன்னுடன் இருக்க வேண்டும் என்று மிரட்டியதாக அவரின் முன்னாள் காதலி காவல் துறையில் புகார் அளித்தார். ரோஹித் தன்னிடம் ஒரு வீடியோவைக் காட்டி, அதில் உள்ள பெண்ணை அடித்துத் துன்புறுத்துவது போல உன்னையும் துன்புறுத்துவேன் என்று மிரட்டியதாகவும் அவர் கூறினார். இதனை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரோஹித் கைது செய்யப்பட்டார்.

வீடியோவில் உத்தம் நகரில் உள்ள ஒரு அலுவலகத்தில் ரோஹித் ஒரு பெண்ணை சரமாரியாக அடித்து உதைக்கிறார்.

அதில் உள்ள பெண் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளார். தன்னைப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக வீடியோவில் உள்ள பெண்ணும் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக உத்தம் நகர் காவல் நிலையத்தில் மற்றொரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x