Last Updated : 11 Sep, 2018 12:18 PM

 

Published : 11 Sep 2018 12:18 PM
Last Updated : 11 Sep 2018 12:18 PM

காஷ்மீரில் இரு தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் தீவிரவாதிகள் இருவர் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை சுட்டுக் கொல்லப்பட்டனர்.

வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டம், ஹண்ட்வாரா பகுதியில் கலூரா என்ற இடத்தில் இன்று காலை இச்சம்பவம் நடைபெற்றதாக காவல் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கலூரா பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாகத் தகவல் கிடைத்ததை அடுத்து பாதுகாப்புப் படைகள் ஒரு தனிப்படையை இன்று அதிகாலை அங்கு அனுப்பி வைத்தது.

பாதுகாப்புப் படையின் தனிப்படைப் பிரிவு தேடுதல் வேட்டையில் இறங்கியதை அறிந்த தீவிரவாதிகள் முதலில் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சண்டையில் தீவிரவாதிகள் இருவர் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்டவர் எந்தத் தீவிரவாதக் குழுவைச் சேர்ந்தவர் என்று இன்னும் உறுதி செய்யப்படவில்லை. தேடுதல் வேட்டை மேலும் தொடர்வதாக காவல் உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x