Published : 11 Sep 2018 08:46 AM
Last Updated : 11 Sep 2018 08:46 AM

மக்களைக் குழப்புவதற்காக காங்கிரஸ் போராட்டம் நடத்துகிறது: மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு விவகாரத்தில் மக்களைக் குழப்பு வதற்காக முழு அடைப்பு போராட் டத்தை காங்கிரஸ் நடத்தியுள்ளது என்று மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான முக்தார் அப்பாஸ் நக்வி கூறினார்.

இதுகுறித்து டெல்லியில் நேற்று அவர் கூறியதாவது: பெட்ரோல், விலை உயர்வு விவ காரத்தை மக்களை குழப்ப காங் கிரஸ் நினைக்கிறது. இதனால் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து கொண்டு மக்களிடையே வதந் தியையும், குழப்பத்தையும் உண்டாக்கி வருகிறது.

காங்கிரஸ் கட்சி ஆட்சியி லிருந்தபோதும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. ஆனால் அப்போது பேசாமல் இருந்த காங்கிரஸ் கட்சி தற்போது மக்களுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கிறது. பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தது முதல் எதிர்மறையான சூழ்நிலையை உருவாக்கும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டு வருகிறது.

பாஜக ஆட்சியில் நாடு வளம் பெற்று வருகிறது. இதைப் பொறுக்க முடியாமல் காங்கிரஸ் கட்சி, முழு அடைப்புப் போராட் டத்தை கையில் எடுத்துள்ளது.

ஊழல் கப்பல் மூழ்கும்

ஊழல் கப்பலாக இருக்கிறது காங்கிரஸ். அந்தக் கட்சியுடன் கூட்டணி வைக்கும் அனைத்துக் கட்சிகளும் அந்த கப்பலுடன் இணைந்து மூழ்கிவிடும்.

2014-ம் ஆண்டில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி அமைந்தபோது நாட்டில் பண வீக்க விகிதம் 11 சதவீதமாக இருந் தது. தற்போது அதை 4 சதவீத அளவுக்குக் கொண்டு வந்துள் ளோம். அது மேலும் குறைக்க நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x