Published : 11 Sep 2018 08:36 AM
Last Updated : 11 Sep 2018 08:36 AM
மும்பையில் கடந்த வாரம் காணாமல்போன எச்டிஎப்சி வங்கி அதிகாரி சித்தார்த் சங்கவியின் உடல் நேற்று முன்தினம் கண்டெ டுக்கப்பட்டது.
இதுதொடர்பாக வாடகைக் கார் டிரைவர் ஒருவரை போலீ ஸார் கைது செய்தனர். தொழில் போட்டியே கொலைக்கு காரண மாக கூறப்படுகிறது.
எச்டிஎப்சி வங்கியில் துணைத் தலைவராக பணியாற்றி வந்த சித்தார்த் சங்கவி (39) கடந்த புதன்கிழமை இரவு காணாமல் போனார். மும்பை லோயர் பரேல் பகுதியில் உள்ள அலுவலகத்தி லிருந்து காரில் அவர் புறப்பட்ட பிறகு, அவரை குடும்பத்தினர் தொடர்புகொள்ள முடியவில்லை. இதையடுத்து அவர்கள் போலீஸில் புகார் அளித்தனர்.
மறுநாள் காலை நவி மும்பையில் சித்தார்த்தின் காரை போலீஸார் கைப்பற்றினர். காரின் பின் இருக்கையில் ஒரு கத்தி மற்றும் ரத்தக்கறை காணப்பட்டது.
இந்நிலையில் சித்தார்த்தின் செல்போன் மீண்டும் இயங்கத் தொடங்கிய பிறகு சர்பராஸ் ஷேக் (20) என்ற வாடகைக் கார் டிரைவரை இந்த வழக்கில் போலீ ஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். சித்தார்த்தை கொலை செய்ததாக சர்பராஸ் ஒப்புக் கொண்டதாகவும் இதன் அடிப் படையில் சித்தார்த்தின் உடல் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்ட தாகவும் நேற்று போலீஸார் கூறினர்.
சித்தார்த்தின் சக ஊழியர்களே அவரை கொலை செய்ய சர்பராஸை ஏவியுள்ளனர். சித்தார்த் துக்கு அடுத்தடுத்து வழங்கப் பட்ட பதவி உயர்வால் ஏற்பட்ட பொறாமையே இதற்கு காரண மாக கூறப்படுகிறது. இது தொடர் பாக ஒரு பெண் உள்ளிட்ட சக ஊழியர்கள் 4 பேரை பிடித்து போலீ ஸார் விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT