Last Updated : 09 Sep, 2018 08:00 PM

 

Published : 09 Sep 2018 08:00 PM
Last Updated : 09 Sep 2018 08:00 PM

‘அடுத்த 50 ஆண்டுகளுக்கு நாட்டில் பாஜகவின் ஆட்சிதான்’: அமித் ஷா சூளுரை

அடுத்த 50 ஆண்டுகளுக்கு நாட்டில் பாஜகவின் ஆட்சிதான் நடக்கும் என்று பாஜக தேசிய செயற்குழுக்கூட்டத்தில் அந்தக் கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா சூளுரைத்துள்ளார்.

பாஜகவின் 2 நாள் தேசிய செயற்குழுக் கூட்டம் நேற்று டெல்லியில் தொடங்கியது. 2-வது நாளான இன்று பிரதமர் மோடி, தேசியத் தலைவர் அமித் ஷா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் உரையாற்றினார்கள், பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

அது குறித்து மத்திய தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான ரவிசங்கர் பிரசாத் நிருபர்களிடம் கூறுகையில், வரும் 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக மிகப்பெரிய வெற்றியைப் பெறும். தற்போது இருக்கும் இடங்களைக் காட்டிலும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று தேசியத் தலைவர் அமித் ஷா பேசினார். அடுத்த 50 ஆண்டுகளுக்கு நாட்டில் பாஜகவின் ஆட்சிதான் நடக்கும். யாரும் பாஜகவை தூக்கிவீசிவிட முடியாது என்று அமித் ஷா தெரிவித்தார்.

2019-ம்ஆண்டு தேர்தலில் பாஜக வெல்லும், ஏனென்றால், மத்திய அரசும், பாஜக ஆளும் மாநிலங்களிலும் ஏராளமான திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தி இருக்கிறோம். நாட்டில் உள்ள அரசியல் என்பது நம்பிக்கை மற்றும் செயல்பாட்டின் அடிப்படையில் வளர்ந்து வருகிறது.

கடந்த 2001-ம் ஆண்டு குஜராத் முதல்வராக நரேந்திர மோடி வந்ததில் இருந்து பாஜக எந்தவிதமான தேர்தலிலும் தோற்கவில்லை. இன்னும் மாநிலத்தில் தொடர்ந்து பாஜகதான் ஆட்சி செய்து வருகிறது. அதற்குக் காரணம் பாஜகவின் சிறந்த செயல்பாடுதான் என்று அமித் ஷா பேசினார் என அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x