Published : 24 Aug 2018 11:06 AM
Last Updated : 24 Aug 2018 11:06 AM

ரயிலில் இருந்து தவறி விழுந்து பிஷப் மரணம்: கதவருகே நின்று பயணம் செய்ததால் நடந்த சோகம்

கேரளாவைச் சேர்ந்த கிறிஸ்தவ பிஷப், ரயில் பயணத்தின்போது கதவருகே நின்று பயணம் செய்த போது தவறி விழுந்து உயிரிழந்தார்.

கேரள மாநிலம் கோட்டயத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மலங்கரா ஆர்தோடக்ஸ் சிரியன் திருச்சபையின் செங்கனூர் கோட்ட ஆர்ச் பிஷப் தாமஸ் மார் அதன்யாசியஸ் (வயது 80). கேரளாவில் மட்டுமின்றி குஜராத் மாநிலத்திலும் இந்த திருச்சபையின் கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் குஜராத் சென்ற ஆர்ச் பிஷப் தாமஸ் ரயிலில் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டு இருந்தார். எர்ணாகுளம் அருகே இன்று காலை ரயில் வந்து கொண்டிருந்தபோது, ரயிலின் வாசலில் நின்றபடி அவர் பயணம் செய்தார்.

அந்த சமயத்தில் பிஷப் பின்புறம் இருந்த ரயில் பெட்டி கதவு திடீரென வேகமாக மூடியது. இதனால் வெளியே வேகமாக தள்ளப்பட்டு ரயிலில் இருந்து அவர் தவறி விழுந்தார். ரயில் சென்ற வேகத்தில் தவறி விழுந்த அவர் உடல் நசுங்கி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x