Published : 20 Aug 2018 08:26 AM
Last Updated : 20 Aug 2018 08:26 AM
ஹரியாணா மாநிலத்தில் தன்னை சித்ரவதை செய்ததாகக் கூறி, கணவருக்கு 'முத்தலாக்' கூறி விவாகரத்து செய்துள்ளார் அவரது மனைவி. இந்நிலையில், அந்தப் பெண் வேறு இளைஞருடன் சென்றுவிட்டதாக அவரது கணவர் போலீஸில் புகார் செய்துள்ளார்.
ஹரியாணாவின் யமுனா நகரில் உள்ள உன்னதி கிராமத்தைச் சேர்ந்தவர் ஷாஜியா. இவருக்கும் முகம்மது அப்பாஸ் என்பவருக்கும் திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளன. ஷாஜியாவுக்கு அவரது கணவர் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதை யடுத்து, தனது கணவருக்கு ‘தலாக், தலாக் தலாக்’ என மூன்று முறை சிறிய பேப்பரில் எழுதி விவாகரத்து செய்துள்ளார் ஷாஜியா.
முஸ்லிம் ஆண்கள் கருத்து வேறுபாடு காரணமாக, மூன்று முறை தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்வது வழக்கமாக இருந்தது. இந்த நடைமுறை இஸ்லாத்துக்கு எதிரானது என்றும் இதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இதை விசாரித்த நீதிமன்றம், முத்தலாக் நடைமுறைக்கு தடை விதித்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தீர்ப்பு வழங்கியது. மேலும் நீதிமன்ற உத்தரவுப்படி, முத்தலாக் நடைமுறையை முற்றிலும் ஒழிக்க முஸ்லிம் பெண்கள் பாதுகாப்பு சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில், ஷாஜியா முத்தலாக் கூறி தனது கணவரை விவாகரத்து செய்துள்ளார்.
இதுகுறித்து ஷாஜியா தனது கணவருக்கு எழுதிய கடிதத்தில், “எனது சுதந்திரமான, சொந்த விருப்பத்தின் பேரில் உன்னை விவா கரத்து செய்கிறேன். மணமானது முதல் உனது சித்ரவதை தாங்காமல் இந்த வீட்டை விட்டும் வெளியேறு கிறேன். மது அருந்தி விட்டு என்னை அடிப்பது உனது வழக்கமாக இருப்பதால் விவாகரத்து செய் கிறேன்” எனக் கூறி உள்ளார்.
இதே கடிதத்தில் மூன்று முறை ‘தலாக்’ என எழுதியுள்ள அவர், இதை யாருடைய தூண்டுதலினா லும் செய்யவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, தனது மனைவியை காணவில்லை என அவரது கணவர் அப்பாஸ் போலீஸில் புகார் செய்துள்ளார். அதில், ஷாஜியா வேறு ஒரு இளைஞருடன் சென்றுவிட்டதாக வும் தெரிவித்துள்ளனர். இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT