Last Updated : 17 Aug, 2018 03:50 PM

 

Published : 17 Aug 2018 03:50 PM
Last Updated : 17 Aug 2018 03:50 PM

முஸ்லிம்களுக்கான ஷரியத் நீதிமன்றம் போல், இந்துக்களுக்கான நீதிமன்றம்: இந்து மகாசபாஅமைத்தது

முஸ்லிம்களுக்கான ஷரியத் நீதிமன்றம் உ.பி மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்படத்திட்டமிட்டு இருக்கும் நிலையில், இந்துக்களுக்கான முதல் இந்து நீதிமன்றத்தை அகில பாரதிய இந்துமகாசபா மீரட் நகரில் அமைத்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் 8-ம் தேதி முஸ்லிம்களின் அமைப்பான அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம் விடுத்த அறிவிப்பில் அனைத்து மாவட்டங்களிலும், முஸ்லிம்கள் சட்டப்படி தீர்வுகாணும் ஷரியத்நீதிமன்றம் அமைக்கப்படும் எனத் தெரிவித்திருந்தது.

ஆனால், இதற்கு அகில இந்திய மகாசபா கடும் எதிர்ப்புத் தெரிவித்து அனைத்து ஷரியத்நீதிமன்றங்களையும் மூட வேண்டும் என்று மத்தியஅரசுக்கு வலியுறுத்தியது. ஆனால், இது குறித்து மத்தியஅரசும், உத்தரப்பிரதேச அரசும் எந்தவிதமான பதிலும் தெரிவிக்கவில்லை.

இதையடுத்து, சுதந்திரத்தினத்தன்று இந்துக்களுக்கான முதல் இந்து நீதிமன்றத்தை மீரட் நகரில் இந்துமகாசபா அமைத்துள்ளது.

இது குறித்து அகில இந்திய இந்து மகாசபாவின் துணைத் தலைவர் அசோக சர்மா நிருபர்களிடம்கூறுகையில், “ முஸ்லிம்களுக்கான ஷரியத் நீதிமன்றத்தை மூட வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்திவந்தோம் ஆனால், பிரதமர் மோடியும், பாஜக அரசும் இது குறித்து கருத்தில் கொள்ளவில்லை. உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத்திடம் கூறியும் அவரும் ஷரியத் நீதிமன்றத்தைத் தடுக்கவில்லை.

ஆதலால், இந்துக்களின் பிரச்சினைகள், குடும்பப் பிரச்சினைகளை சுமூகமான முறையில் பேசித்தீர்த்துவைக்கவும், சிவில் வழக்குகளை முடித்து வைக்கவும் இந்து நீதிமன்றத்தை மீரட் நகரில்உருவாக்கியுள்ளோம்.

மேலும், அலிகார், ஹத்ராஸ், மதுர, பெரோசாபாத், சிக்கோஹாபாத் ஆகிய மாவட்டங்களிலும் நவம்பர் 15-ம்தேதிக்குள் இந்து நீதிமன்றம் உருவாக்கப்படும். நவம்பர் 15-ம் தேதி என்பது காந்தியைக் கொன்ற நாதுராம்கோட்சே தூக்கிலிடப்பட்டநாளாகும்.

மீரட்டில் தொடங்கப்பட்டுள்ள இந்து நீதிமன்றத்தின் முதல் நீதிபதியாக பூஜா சகுன பண்டேநியமிக்கப்பட்டுள்ளார். ஷாரியத் நீதிமன்றம் போல் இந்த நீதிமன்றத்துக்கு எந்த ஒப்புதலும் தேவையில்லை” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x