Published : 17 Aug 2018 08:46 AM
Last Updated : 17 Aug 2018 08:46 AM

ஐ.நா.வில் முதல்முறையாக இந்தியில் உரையாற்றினார்

கடந்த 1977-ம் ஆண்டில் அப்போதைய வெளியுறவு அமைச்சராக ஐ.நா. பொது சபை கூட்டத்தில் வாஜ்பாய் பங்கேற்றார். பொதுவாக ஐ.நா. கூட்டங்களில் பங்கேற்கும் இந்திய பிரதமர்கள், அமைச்சர் கள் ஆங்கிலத்தில் பேசுவதுதான் வழக்கம். ஆனால் முதல்முறை யாக வாஜ்பாய் இந்தியில் உரையாற்றினார்.

அதன்பின் 1978-ல் நடந்த ஐ.நா. பொது சபை கூட்டத்திலும் இந்தியில் அவர் பேசினார். கடந்த 1998-ம் ஆண்டில் இந்திய பிரதமராக ஐ.நா. பொது சபை கூட்டத்தில் வாஜ்பாய் பங்கேற்றார். அப்போதும் அவர் இந்தியில் உரையாற்றினார். மொத்தம் 7 முறை ஐ.நா. பொது சபை கூட்டத்தில் வாஜ்பாய் பங்கேற்றார்.

ஆங்கிலத்தில் புலமை பெற் றிருந்தும் ஐ.நா. சபையில் 7 முறையும் வாஜ்பாய் இந்தி யிலேயே பேசினார். இதன் மூலம் சர்வதேச அரங்கில் இந்திக்கு தனி மரியாதை கிடைத்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x