Published : 17 Aug 2018 08:31 AM
Last Updated : 17 Aug 2018 08:31 AM

தேசிய கீதம் பாட விடாமல் தடுத்த மதரசா மீது வழக்கு 

உத்தரபிரதேச மாநிலம் மகராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள மவுலானா சுபைத் அன்சாரி என்ற மதரசாவில் சுதந்திர தினத்தையொட்டி தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

பள்ளி மாணவர்கள் தேசிய கீதம் பாடத் தொடங்கினர். உடனே, பள்ளியின் ஆசிரியர்கள் தேசிய கீதத்தை பாடக்கூடாது என்று தடுத்தனர். இந்தக் காட்சியை யாரோ ஒருவர் செல் போனில் படம் பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுவிட் டார். இதையடுத்து தேசிய கீதம் பாடவிடாமல் தடுத்த 3 ஆசிரியர்கள் மீது தேச துரோகம் உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட் டுள்ளது. ஒரு ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவான 2 பேரை தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x