Published : 14 Aug 2018 11:29 AM
Last Updated : 14 Aug 2018 11:29 AM
காஷ்மீர் மாநிலத்தின் டங்தார் செக்டர் பகுதியில் உள்ள சர்வதேச எல்லைப் பகுதியில் தீவிரவாதிகளின் ஊடுருவல் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் நடந்த சண்டையில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து பேசிய ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், ‘‘டங்தார் செக்டரில் சர்வதேச எல்லைக்கட்டுப்பாடு கோடு உள்ளது. அங்கு சில தீவிரவாதிகள் சிலர் நேற்று ஊடுருவ முயன்றனர். தீவிரவாதிகளின் இம்முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. எனினும், இதில் எல்லை வீரர் உயிரிழந்தார். அவரது பெயர் செபாய் புஷ்பேந்திர சிங்.
உயிரிழந்த ராணுவ வீரர் புஷ்பேந்திர சிங்கிற்கு இன்று மலர் அஞ்சலி செலுத்தப்படும்.எல்லையில் ஊடுருவல்காரர்களை தடுக்கும் முயற்சியின்போது திடீர் குண்டுவெடிப்பில்தான் புஷ்பேந்திர சிங் கொல்லப்பட்டார். இந்த குண்டுவெடிப்பு எவ்வாறு நடந்ததென இன்னும் தெளிவாக புலப்படவில்லை என்று கூறப்படுகிறது.
நேற்று மாலை யூரி செக்டர் பகுதியில் நடந்த இன்னொரு சம்பவத்தில் இன்னொரு எல்லை வீரர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். சுதந்திர தினக்கொண்டாட்டங்கள் நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில் பாக். தீவிரவாதிகளின் ஊடுருவல் அதிகரித்து வருகிறது.
எல்லை பாதுகாப்புப் படையினரும் தொடர்ந்து தீவிரவாதிகளை வேட்டையாடி வருகின்றனர். ஊடுருவல் முறியடிக்கப்பட்டு வருகிறது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT