Last Updated : 14 Aug, 2018 08:32 AM

 

Published : 14 Aug 2018 08:32 AM
Last Updated : 14 Aug 2018 08:32 AM

பருவமழை தொடங்கியதிலிருந்து இதுவரை மழை, வெள்ளத்தில் சிக்கி 7 மாநிலங்களில் 774 பேர் பலி

இந்த ஆண்டு பருவமழை தொடங்கியதிலிருந்து வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இதுவரை 7 மாநிலங்களைச் சேர்ந்த 774 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் தேசிய அவசரகால மீட்பு மையத்தின் (என்இஆர்சி) புள்ளி விவரப்படி, கேரளாவில் மழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி அதிகபட்சமாக 187 பேர் உயிரிழந்துள்ளனர்.

உத்தரபிரதேசத்தில் 171 பேரும் மேற்குவங்கத்தில் 170 பேரும், மகாராஷ்டிராவில் 139 பேரும், குஜராத்தில் 52 பேரும், அசாமில் 45 பேரும், நாகாலாந்தில் 8 பேரும் உயிரிழந்துள்ளனர்.

மழை, வெள்ளம் காரணமாக கேரளாவில் 22 பேரும் மேற்கு வங்கத்தில் 5 பேரும் காணாமல் போய் உள்ளனர். மேலும் 245 பேர் காயமடைந்துள்ளனர்.

கனமழையால் மகாராஷ்டிரா வில் 26, அசாமில் 23, மேற்குவங் கத்தில் 22, கேரளாவில் 14, உத்தர பிரதேசத்தில் 12, நாகாலாந்தில் 11, குஜராத்தில் 10 மாவட்டங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

அசாமில் மழை, வெள்ளம் காரணமாக 11.45 லட்சம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள னர். 27,552 ஹெக்டேரில் பயிர்கள் சேதமடைந்துள்ளன. பேரிடர் மீட்புப் படையின் 675 வீரர்கள் அசாமில் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவ் வாறு அந்த புள்ளி விவரம் கூறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x