Published : 10 Aug 2018 08:38 AM
Last Updated : 10 Aug 2018 08:38 AM
மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு முதல் முறையாக நேற்று மாநிலங்களவைக்கு வந்திருந்தார்.
மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் நிறுவன விவகாரங்கள் துறை அமைச்சராக அருண் ஜேட்லி பொறுப்பு வகித்தார். இந்நிலையில் கடந்த மே 14-ம் தேதி அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. இதையடுத்து, அவருடைய அமைச்சக பொறுப்பு கள் இடைக்கால ஏற்பாடாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோய லிடம் ஒப்படைக்கப்பட்டது.
மாநிலங்களவை உறுப்பின ரான அருண் ஜேட்லி, அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஓய்வெடுத்து வந்தார். இதனால் நாடாளுமன்றத் துக்கும் அவர் வரவில்லை. இந் நிலையில், நேற்று மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து சுமார் 4 மாதங்களுக்குப் பிறகு அருண் ஜேட்லி நேற்று மாநிலங் களவைக்கு வந்து வாக்கெடுப்பில் பங்கேற்றார்.
முன்னதாக, அவை கூடியதும், எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் உட்பட அனைத்து உறுப்பினர்களும் மேசையை தட்டி அருண் ஜேட்லிக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பின்னர் மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடந்தது. இதில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் வெற்றி பெற்றார்.
பின்னர் மாநிலங்களவையில் இருந்த பிரதமர் மோடி கூறும் போது, “மாநிலங்களவை பாஜக தலைவர் அருண் ஜேட்லி மீண்டும் அவைக்கு வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.
மக்களவையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேசும்போது, “அமைச்சர் அருண் ஜேட்லியின் உடல்நிலை நன்றாக உள்ளது என்பதையும் அவர் விரை வில் வழக்கமான பணிகளை கவனிப்பார் என்றும் இந்த அவை யில் தெரிவிக்க விரும்புகிறேன்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT