Last Updated : 10 Aug, 2018 08:31 AM

 

Published : 10 Aug 2018 08:31 AM
Last Updated : 10 Aug 2018 08:31 AM

கர்நாடகாவில் மீண்டும் கனமழை; தமிழகத்துக்கு ஒரு லட்சம் கன அடி நீர் திறப்பு- காவிரியில் வெள்ள அபாய எச்சரிக்கை

கர்நாடகாவில் மீண்டும் கன‌ மழை பெய்துவருவதால் கிருஷ்ணராஜ சாகர், கபினி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைகளின் பாதுகாப்பு கருதி, காவிரியில் தமிழகத்துக்கு வினா டிக்கு ஒரு லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் கடந்த மே மாத இறுதியில் இருந்து ஜூலை மாதம் வரை தென்மேற்கு பருவ மழை பெய்தது. காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் கொட்டி தீர்த்த கனமழையால், ஹாரங்கி, ஹேமா வதி, கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய 4 அணைகளும் ஜூலை 2-ம் வாரத்தில் முழு கொள்ளளவை எட்டியது. எனவே, தமிழகத்துக்கு அதிகளவில் காவிரி நீர் திறக்கப் பட்டது. இதனிடையே, கர்நாடக முதல்வர் குமாரசாமி, கடந்த மாதம் 20-ம் தேதி கிருஷ்ணராஜசாகர், க‌பினி உள்ளிட்ட அணைகளுக்கு சமர்ப்பண பூஜை செய்தார்.

இதனால், இரு அணைகளில் இருந்தும் தமிழகத்துக்கு அதிக பட்சமாக விநாடிக்கு 1. 20 லட்சம் கன அடிக்கு மேல் நீர் திறக்கப் ப‌ட்டது. இதன் காரணமாக, மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால், நீண்ட காலத்துக்கு பிறகு காவிரியில் வெள்ளம் புரண் டோடிய‌து. கடந்த சில வாரங்களாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப் பொழிவின் அளவு குறைந் ததால் தமிழகத்துக்கு திறக்கப்பட்ட நீரின் அளவும் குறைக்கப்பட்ட‌து.

கடந்த இரு தினங்களாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தலக்காவிரி, பாகமண்டலா, மடிகேரி உள்ளிட்ட இடங்களில் கன‌மழை பெய்தது. இதே போல், கேரள மாநிலம் வயநாட்டில் பலத்த மழை பெய்துவருவதால் கபினி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், கிருஷ்ண ராஜசாகர், கபினி ஆகிய‌ அணை களுக்கு நீர்வரத்து திடீரென அதிகரித்தது.

நேற்று மாலை 6 மணி நிலவரப்படி 124.80 அடி உயரம் கொண்ட கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 124.30 அடியாக உயர்ந்தது. அணைக்கு விநாடிக்கு 38 ஆயிரத்து 450 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கும் நிலையில், அணையில் இருந்து விநாடிக்கு 50 ஆயிரத்து 780 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அதேபோல், கபினி அணையின் நீர்மட்டம் 2,283.90 அடியாக உள்ள‌து. அணைக்கு விநாடிக்கு 55 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், அணையில் இருந்து விநாடிக்கு 56,200 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இரு அணைகளின் பாது காப்பையும் கருதி, தமிழகத்துக்கு காவிரியில் விநாடிக்கு ஒரு லட்சத்து 6 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. மேலும், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச் சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. மைசூரு, மண்டியா காவிரி கரை யோர கிராம மக்கள், பாதுகாப் பான இடங்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர். காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் மேட்டூர் அணைக்கு செல்லும் நீரின் அளவு கணிசமாக அதிகரித்துள்ளது.

காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் 2-வது கூட்டம் அதன் தலைவர் நவீன் குமார் தலைமை யில் நேற்று டெல்லியில் நடந்தது. இதில் பங்கேற்ற கர்நாடக நீர்ப் பாசனத்துறை பொறியாளர்கள், “காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்ட அளவைக் காட்டிலும், தமிழகத்துக்கு கடந்த ஜூலை மாதம் அதிகப்படியான நீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஜூலையில் 58 டிஎம்சி நீர் வழங்க வேண்டிய நிலையில், 140 டிஎம்சி நீர் திறந்துவிட்டுள்ளது’’ என்றனர். இதற்கு தமிழக அதிகாரிகள் அணை நிரம்பியதால் வேறு வழியின்றி திறந்துவிடப்பட்ட உபரி நீரையும் கர்நாடகா கணக்கிட்டுள்ளது என குற்றம்சாட்டினர். அதற்கு கர்நாடக அதிகாரிகள், “பிலிகுண்டுலு அளவை நிலையத்தில் பதிவா கும் அனைத்து நீரும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டி யவையே’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x