Published : 06 Aug 2018 12:59 PM
Last Updated : 06 Aug 2018 12:59 PM
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இடஒதுக்கீடு கேட்கும் மராத்தா மக்களுக்கு பதிலளிக்கும் வகையில் ''வேலை எங்கே இருக்கிறது'' என்று கூறியிருந்தததற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ''ஒவ்வொரு இந்தியனும் இதைத்தானே ஜி கேட்கிறான்'' ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ளார்.
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கடந்த சனிக்கிழமை அன்று அவுரங்காபாத் வந்திருந்தார். அப்போது மகாராஷ்டிராவில் மராத்தா சமூகப் பிரிவினர் இட ஒதுக்கீடு போராட்டம் நடத்திக்கொண்டிருந்தனர். இதே கோரிக்கையை அங்குள்ள மற்ற சமூகங்களும் முன்வைத்துள்ளன.
இந்நிலையில் செய்தியாளர்கள் அமைச்சரிடம் இதுகுறித்து கேட்டபோது, அதற்கு அவர் பதிலளிக்கையில், ''இட ஒதுக்கீடு தாராளமாக கொடுக்கலாம். ஆனால் அரசு வேலைவாய்ப்பு குறைந்து வருகிறது. ஐடி துறை வந்தபிறகு வங்கிகளிலேயே வேலைகள் குறைந்துவிட்டன. அரசு வேலைவாய்ப்புகள் முற்றிலும் முடக்கப்பட்டுவிட்டன. வேலை எங்கே இருக்கிறது?'' என்று அவர் செய்தியாளர்களையே திருப்பிக் கேட்டார்.
இதற்கு ராகுல் காந்தி இன்று பதிவிட்டுள்ள ட்விட்டர் பதில் வருமாறு:
''மிகச் சிறந்த கேள்வி கட்காரி ஜி. ஒவ்வொரு இந்தியனும் இதே கேள்வியைத்தான் கேட்கிறான்."
கட்கரி கருத்துக்களைக் கொண்டிருக்கும் ஊடக அறிக்கையையும் அதில் ராகுல் குறிப்பிட்டிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT