Published : 06 Aug 2018 10:22 AM
Last Updated : 06 Aug 2018 10:22 AM

உத்தராகண்ட்டில் பசு பாதுகாவலர் அடையாள அட்டை

நாடு முழுவதும் பசு பாதுகாப்பு என்ற பெயரில் அப்பாவிகள் அடித்துக் கொல்லப்படும் சம்ப வங்கள் அதிகரித்து வருகின்றன. இதை தடுக்க உத்தராகண்டில் உண்மையான பசு பாது காவலர்களுக்கு அடையாள அட்டை வழங்க அரசு திட்டமிட் டுள்ளது.

இதுகுறித்து மாநில அரசின் பசு சேவா ஆயோக் அமைப் பின் தலைவர் என்.எஸ்.ராவத் கூறும்போது, ‘மாநிலம் முழுவதும் உண்மையான பசு பாதுகாவலர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு அடையாள அட்டை வழங்க திட்டமிட்டுள்ளோம். இதுவரை 6 மாவட்டங்களில் கணக்கெடுப்பு முடிந்துள்ளது. நாட்டில் முதல் முறையாக இந்த திட்டத்தை உத்தராகண்டில் அறிமுகம் செய் கிறோம்’ என்று தெரிவித்தார்.

உத்தராகண்டில் திரிவேந்திர சிங் ராவத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x