Published : 01 Aug 2018 07:22 AM
Last Updated : 01 Aug 2018 07:22 AM
லஞ்சம் கொடுப்பவர்கள் பிடிபட் டால் அவர்களுக்கு இனி 7 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்க வகை செய்யும் புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது.
ஊழல் தடுப்புச் சட்டம் 1988-ல் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி இந்தச் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளி லும் ஒப்புதல் பெறப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இந்த புதியச் சட்டத்துக்கு அண்மையில் ஒப்புதல் அளித்துள்ளார். இதை யடுத்து ஊழல் தடுப்பு திருத்தச் சட்டம் கடந்த ஜூலை 26-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதிய சட்டத்தின்படி லஞ்சம் கொடுப்பவர்களுக்கும் இனி சிறைத் தண்டனை கிடைக்கவுள்ளது. லஞ் சம் கொடுப்பவர்கள் பிடிபட்டால் அவர்களுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
மேலும் அரசு ஊழியர்கள், அரசி யல்வாதிகள், அரசு அதிகாரிகள், வங்கியாளர்கள் உள்ளிட்டோருக்கு பாதுகாப்பையும் இந்த புதிய சட்டம் வழங்குகிறது. இவர்கள் மீது ஊழல், லஞ்சக் குற்றச்சாட்டு எழும்பட்சத்தில் சிபிஐ உள்ளிட்ட விசாரணை அமைப்புகள், சம்பந்தப் பட்டவரின் மேல் அதிகாரியிடம் ஒப்புதல் பெற்ற பின்னரே அவர்களை விசாரிக்கவோ கைது செய்யவோ முடியும்.
அதற்கான ஷரத்துகள் புதிய சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாகப் பிடிபடும் அதிகாரி, அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க யாருடைய அனுமதியும் தேவையில்லை என சட்டம் தெரிவித்துள்ளது. புதிய சட்டமானது ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள், அதிகாரிகளுக்கும் பொருந்தும்.
லஞ்சம் பெறும் அரசு ஊழியர் கள், அதிகாரிகள், அரசியல்வாதி களுக்கான தண்டனை 3 ஆண்டிலிருந்து 7 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் வர்த்தக அமைப்புகளும் இந்த சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. அதைப் போலவே ஊழல் வழக்கு விசாரணையை 2 ஆண்டுகளுக்குள் நடத்தி முடிக்கவும் இந்த சட்டம் வழிவகை செய்கிறது.
இதுகுறித்து மத்திய அமைச் சர் அருண் ஜேட்லி சமீபத்தில் கூறும்போது, “இந்த புதிய சட்டத்தால் நேர்மையான அதிகாரி களுக்கு பாதுகாப்பு ஏற்பட்டுள்ளது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT