Last Updated : 24 Jul, 2018 08:59 PM

 

Published : 24 Jul 2018 08:59 PM
Last Updated : 24 Jul 2018 08:59 PM

இந்து பெண்ணை மணக்க முயன்ற முஸ்லீம் இளைஞர் மீது நீதிமன்ற வளாகத்தில் தாக்கிய கும்பல்

இந்து பெண்ணை பதிவுத் திருமணம் செய்ய வந்த முஸ்லீம் இளைஞர் மீது அங்கிருந்த கும்பல் கடுமையாகத் தாக்கியது. இந்த சம்பவம் நேற்று மதியம் உபியின் காஜியாபாத்தில் நடைபெற்றுள்ளது.

டெல்லியில் அருகிலுள்ள உபியின் நொய்டவில் பணியாற்றுபவர் சாஹில் அகமது(25). போபாலை சேர்ந்த சாஹிலுக்கு பிஜ்னோரின் இந்து இளம்பெண் மீது காதல் வளர்ந்துள்ளது. இதனால், இருவரும் பதிவுத் திருமணம் செய்ய முடிவு எடுத்தனர். இதற்காக காஜியாத் நீதிமன்றம் வந்த போது அங்கிருந்த கும்பல் சாஹில் மீது திடீர் தாக்குதல் நடத்தினர்.

இதை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த உபி போலீஸார் தலையிட்டு சாஹிலை கும்பலின் தாக்குதலில் இருந்து காப்பாற்றினர். இந்த சம்பவத்திற்காக வினோத், நவ்நீத் உள்ளிட்ட பல அடையாளம் தெரியாதவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். ஆனால், எவரும் இதுவரை கைது செய்யபப்டவில்லை.

தன் மீதான தாக்குதலுக்கு அஞ்சிய காதல் ஜோடிகள் பயந்து போய் எவர் மீதும் புகார் அளிக்க முன்வரவில்லை. எனவே, காஜியாத்தின் சிஹானி கேட் காவல் நிலையத்தினர் தானாக முன்வந்து இந்த வழக்கை பதிவு செய்துள்ளனர். அதன் ஆய்வாளர் சஞய் பாண்டே வழக்கை விசாரணை செய்து வருகிறார்..

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x