Published : 24 Jul 2018 08:36 AM
Last Updated : 24 Jul 2018 08:36 AM
ராஜஸ்தான் மாநிலம் அல்வரில் இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கு ஜெய்ப்பூர் நகருக்கு மாற்றப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் அல்வர் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக் கிழமை தனது 2 பசுக்களை அழைத் துக் கொண்டு 28 வயதுடைய இளைஞர் ரக்பர் கான், நண்பர் அஸ்லாமுடன் வனப்பகுதி வழி யாக ஹரியாணாவுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். அப் போது பசுக்களைக் கடத்துவதாகக் கூறி ஒரு கும்பல் அவர்கள் 2 பேரையும் கடுமையாகத் தாக்கியது. அப்போது அந்த கும்பலிடமிருந்து அஸ்லாம் தப்பிச் சென்றுவிட்டார்.
சம்பவம் அறிந்து அங்கு விரைந்து போலீஸார், ரக்பர் கானை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் நேரடியாக மருத்துவமனைக்குச் செல்லாமல் வழியில் தேநீர் சாப் பிடுவதற்காக கடையில் நிறுத்தி பின்னர் சென்றுள்ளனர். பின்னர் அந்த பசுக்களை, கோசாலையில் விட்டு விட்டு மருத்துவமனைக்குச் செல்ல 3 மணி நேரமானதால், ரக்பர் கான் இறந்துவிட்டார். போலீ ஸாரின் மெத்தனம் காரணமாக ரக்பர் கான் இறந்துள்ளார்.
ரக்பர்கான், ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்தவர். இந்த சம்பவம் ராஜஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று, அல்வர் மாவட்டத்திலிருந்து ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப் பூருக்கு மாற்றப்பட்டுள்ளது என்று ஜெய்ப்பூர் கூடுதல் போலீஸ் எஸ்.பி. வந்தனா பட்டி தெரிவித்தார்.
இந்த வழக்கில் இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராஜஸ்தானில் நடந்த கொலையை சுட்டிக்காட்டி இதுதான் பிரதமர் மோடியின் மிருகத்தனமான புதிய இந்தியா என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் தாக்கியுள்ளார்.
ட்விட்டரில் அவர் கூறியதாவது:
கும்பலால் தாக்கப்பட்ட ரக்பர் கானை போலீஸார் மிகவும் தாமதமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். 6 கிலோமீட்டர் தூரத்திலுள்ள மருத்துவமனைக்கு நேர்வழியாக செல்லாமல், தேநீர் குடித்துவிட்டு, பின்னர் 3 மணி நேரம் தாமதமாக சென்றுள்ளனர்.
இதுதான் பிரதமர் மோடியின் மிருகத்தனமான புதிய இந்தியா. மோடியின் புதிய இந்தியாவில் மனிதத்தன்மைக்குப் பதிலாக வெறுப்பு கூட்டப்படுகிறது. இதனால் அப்பாவி மனிதர்கள் கொல்லப்படுகிறார்கள். இவ்வாறு ராகுல் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT