Published : 24 Jul 2018 07:46 AM
Last Updated : 24 Jul 2018 07:46 AM
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள பகுதி களில் காணப்படும் நிலத்தடி நீரில் கடுமையான மாசுபாடு ஏற்பட்டிருப்பதாக மத்திய நிலத்தடி நீர் வாரியம் அறிக்கை அளித்துள்ளது.
இதுகுறித்து மாநிலங்களவை யில் நேற்று எழுப்பப்பட்ட கேள் விக்கு, மத்திய நீர்வளத்துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேஹ்வால் பதிலளித்து பேசியதாவது:
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை அமைந்துள்ள பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் மத்திய நிலத்தடி நீர் வாரிய அதிகாரிகள் அண்மையில் ஆய்வு மேற்கொண்டனர். இதில், அங்குள்ள நிலத்தடி நீரில் அனு மதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிக அளவில் காட்மியம், குரோமியம், மெக்னீசியம், இரும்பு மற்றும் ஆர்சேனிக் ஆகிய உலோக மாசுகள் இருப்பது தெரியவந்துள்ளது.
அதேபோல், தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அளித்துள்ள ஆய்வறிக்கையில், ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள பகுதி களில் உள்ள நிலத்தடி நீரில் இரும்பு, நிக்கல், காட்மியம், புளூ ரைடு ஆகிய உலோக மாசுக்கள் கலந்திருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது என அர்ஜுன் ராம் மேஹ்வால் தெரிவித்தார்.
நிலத்தடி நீர் மற்றும் காற்றில் அதிக அளவு மாசுக்களை உண் டாக்குவதால் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி, கடந்த மே 22-ம் தேதி தூத்துக்குடியில் பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது. இதில், போராட் டத்தைக் கலைப்பதற்காக காவல் துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT