Published : 20 Jul 2018 09:49 PM
Last Updated : 20 Jul 2018 09:49 PM
மக்களவையில் பிரதமரை ராகுல் காந்தி கட்டிப்பிடித்தது சாதாரணமானது அல்ல. மோடிக்கு ராகுல் காந்தி அளித்த அதிர்ச்சி என்று சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது.
மத்தியில் ஆளும் பாஜக அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பி.சீனிவாஸ் இன்று கொண்டுவந்தார். அதன் மீது நடந்த விவாதத்தில் அனைத்துக் கட்சி எம்.பி.க்களும் பேசினார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசும்போது, தன்னைச் சிறுபிள்ளையாக மோடி கருதுகிறார், ஆனாலும் நான் அவர் மீது வெறுப்பு கொள்ளமாட்டேன் என்று கூறிவிட்டு, பிரதமர் இருக்கைக்குச் மோடியைக் கட்டித் தழுவினார். பதிலுக்கு ராகுலை அழைத்துக் கைகுலுக்கி பாராட்டினார் மோடி.
இந்தச் சம்பவம் பாஜக தலைவர்கள் மத்தியில் விமர்சனங்களாகவும், சமூக ஊடகங்களில் விவாதப்பொருளாகவும், காங்கிரஸ் கட்சி சார்பில் மிகப்பெரிய அரசியல் நகர்த்தல் என்றும் பார்க்கப்படுகிறது.
இது குறித்து சிவசேனா கட்சி கருத்து தெரிவித்துள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சிவசேனா கட்சி அங்கம் வகித்து இருந்தபோதிலும், கூட இன்றைய நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் பங்கேற்காமல் வெளிநடப்பு செய்துவிட்டது.
அந்தக் கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் மும்பையில் நிருபர்களிடம் கூறுகையில், ''மக்களவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின்போது பிரதமரை ராகுல் காந்தி கட்டிப்பிடிக்கவில்லை. மோடிக்கு ராகுல் காந்தி அளித்த மிகப்பெரிய அதிர்ச்சியாகவே பார்க்கிறோம். உண்மையான அரசியல் பள்ளிக்கூடத்தில் இருந்து ராகுல் காந்தி பட்டம் பெற்றுவிட்டார். பாஜகவுக்கு இன்று கிடைத்த அதிர்ச்சியைப் போல் அடுத்து எதிர்காலத்தில் அடுத்தடுத்த அதிர்ச்சிகளை ராகுல் கொடுப்பார்'' எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT