Published : 20 Jul 2018 05:04 PM
Last Updated : 20 Jul 2018 05:04 PM

இளம் பெண்ணை அடைத்து வைத்து 40 பேர் பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம்: வேலை தருவதாக கூறி நடந்த அவலம்

ஹரியாணா மாநிலத்தில் வேலை தருவதாக கூறி இளம் பெண்ணை விருந்தினர் மாளிகையில், 4 நாட்கள் அடைத்து வைத்து, 40 பேர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சண்டிகரைச் சேர்ந்த 20 வயது இளம் பெண் ஒருவர் ஹரியாணா மாநிலம் பஞ்ச்குலா மாவட்டத்தில் உள்ள மோர்ஹினி ஹில்ஸ் பகுதிக்கு  வேலை தேடி சென்றுள்ளார். அங்கிருந்த ஒருவர் வேலை தருவதாக உறுதி அளித்துள்ளார். மேலும் வேலை தருவது தொடர்பாக பேச வேண்டும் எனக் கூறி அந்த பெண்ணை, மோர்ஹினியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு அழைத்துச் சென்றார்.

அங்கிருந்த வேறு சிலரும் சேர்ந்து இளம் பெண்ணை அடைத்து வைத்தனர். 4 நாட்கள் அடைத்து வைக்கப்பட்ட அந்த பெண்ணை, 40 பேர் மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதன் பிறகு பெரும் போராட்டத்திற்கிற்கிடையே அந்த பெண், அங்கிருந்து தப்பி வந்துள்ளார். சண்டிகர் திரும்பிய அந்த பெண், தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து வீட்டில் உள்ளவர்களிடம் கூறி கதறி அழுதுள்ளார்.

பின்னர் பெற்றோர் சென்று காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார் இருவரை கைது செய்துள்ளனர். பாலியல் பலாத்காரம் செய்த மற்றவர்களை தேடி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில் ‘‘பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்துள்ளோம். இதுதொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது’’ எனக் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x