Last Updated : 10 Jul, 2018 12:09 PM

 

Published : 10 Jul 2018 12:09 PM
Last Updated : 10 Jul 2018 12:09 PM

மனைவியுடன் சண்டை; 3-வயது குழந்தையை தூக்கி ஆட்டோ மீது அடித்த தந்தை: ஹைதாராபாத்தில் கொடூரம்

 தெலங்கானா மாநிலத்தில், மதுபோதையில் இருந்த இளைஞர் ஒருவர் மனைவியுடன் ஏற்பட்ட சண்டையில் ஆத்திரமடைந்து, தனது 3 வயது மகனை  நின்றிருந்த ஆட்டோ மீது அடித்து, கொடூரமாக தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.

ஹைதராபாத்தின் புறநகர் பகுதியான ஜாகத்கிரிகுட்டா பகுதியில் சீனாவாசா நகரைச் சேர்ந்தவர் ஷிவா கவுட்(வயது 30). இவர் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார். இவருக்கு மனைவியும், 3வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில், நேற்று, மதுபோதையில் வந்த ஷிவா கவுட் மனைவியுடன் சண்டையிட்டுள்ளார்.

தனது மனைவி வேறு ஒருவருடன் பழகிவருவதைச் சுட்டிக்காட்டி சண்டையிட்டு, பெரும் ரகளையில் ஈடுபட்டார். அப்போது, திடீரென ஆத்திரத்தில் வீட்டு முன் விளையாடிக்கொண்டிருந்த தனது 3 வயது மகனைக் தூக்கி, நின்றிருந்த ஆட்டோ மீது அடித்தார். இதைப் பார்த்த கவுட்டின் மனைவியும், மற்றவர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

சில வினாடிகள் கழித்து, ஷிவா கவுடாவை பிடிக்க அனைவரும் முயன்றபோது, அவர் தனது மகனை விட்டுவிட்டு தப்பிஓடினார். தலையில் பலத்த காயமடைந்த அந்தக் குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு அங்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் இருந்த வீட்டில் கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்தது.

அந்த கேமிராவில் பதிவான காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி, வைரலானது. இதையடுத்து ஜாகத்கிரிகுட்டா போலீஸாருக்கு அப்பகுதி மக்கள் இது தொடர்பாக தகவல் அளித்தனர். அங்கு வந்த போலீஸார் இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்து தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தனர்.

ஐபிசி பிரிவு 324, சிறுகுழந்தைகள் பாதுகாப்புச் சட்டம் பிரிவு 75 ஆகியவற்றின் கீழ் ஷிவா ஷிவா கவுட்டை தேடி வருகின்றனர். இதற்கிடையே குழந்தையின் எதிர்கால வாழ்வின் நலன் கருதி அந்தக் குழந்தையின் தாய் புகார் அளிக்க மறுத்துவிட்டார். இதனால், போலீஸார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x