Published : 10 Jul 2018 08:00 AM
Last Updated : 10 Jul 2018 08:00 AM
உத்தரபிரதேச மாநிலம் மகோபா மாவட்டம் பஹ்ரேத்தா கிராமத்தைச் சேர்ந்த 24 வயது பெண் ஒருவர் போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார்.
அந்தப் புகாரில், சமையல் செய்தபோது சப்பாத்தி கருகி விட்டது. அதை கணவருக்கு சாப்பிட அளித்தபோது கோபமடைந்து தலாக் சொல்லி என்னை விவாகரத்து செய்துவிட்டார். விவாகரத்து செய்வதற்கு முன்னர் சிகரெட்டால் பலமுறை என் உடலில் சூடு வைத்து சித்ரவதை செய்தார் என்று குறிப்பிட்டுள்ளார். இவர்களுக்கு கடந்த வருடம்தான் திருமணமாகியுள்ளது.
இதையடுத்து குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழ் கணவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி பன்ஷ்ராஜ் யாதவ் தெரிவித்தார். மேலும் அந்த பெண்ணின் கணவரை தேடி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT