Published : 09 Jul 2018 08:27 AM
Last Updated : 09 Jul 2018 08:27 AM
கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் எம்.எம். ஜேக்கப் நேற்று கோட்டயத்தில் காலமானார்.
90 வயதான அவர், உடல்நலக்குறைவால் கோட்டயம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று காலை சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். கேரள மாநில அமைச்சர், மத்திய அமைச்சர், மாநிலங்களவை எம்.பி., கேரள காங்கிரஸ் பொதுச் செயலர் என பல பதவிகளை வகித்துள்ளார். மாநிலங்களவை துணைத் தலைவராகவும், மேகாலயா மாநில ஆளுநராகவும் அவர் பதவி வகித்துள்ளார்.
அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது இறுதிச் சடங்குகள் இன்று நடைபெறவுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT