Last Updated : 09 Jul, 2018 08:24 AM

 

Published : 09 Jul 2018 08:24 AM
Last Updated : 09 Jul 2018 08:24 AM

35% சிறுபான்மையினர் பாஜகவுக்கு வாக்களிப்பார்கள்: மத்திய அமைச்சர் நம்பிக்கை

மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

கடந்த 2014-ம் ஆண்டு பாஜக ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது, பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் முயற்சி செய்தன. சிறுபான்மையினருக்கு எதிராக பாஜக அரசு செயல்படுவதாக பிரச்சாரம் செய்தனர். ஆனால், பாஜக அரசு இதை முறியடித்துள்ளது. மோடி பிரதமரான பிறகு மதக் கலவரம் பெரிதாக நடைபெறவில்லை. காஷ்மீரைத் தவிர வேறு எங்கும் தீவிரவாத தாக்குதல்கள் நடைபெறவில்லை. காங்கிரஸ் ஆட்சியின்போது, 530 அப்பாவி முஸ்லிம்கள் தீவிரவாதி முத்திரை குத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஆனால் பாஜக அரசில் ஒரு அப்பாவி முஸ்லிம்கூட கைது செய்யப்படவில்லை. மேலும் எவ்வித பாரபட்சமும் இல்லாமல் சிறுபான்மையினர் மேம்பாட்டுக்காக பல்வேறு நலத்திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. பிரதமர் மோடி நாட்டின் வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறார் என சிறுபான்மையினர் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. எனவே, வரும் மக்களவைத் தேர்தலில், முஸ்லிம்கள் உட்பட 30 முதல் 35 சதவீத சிறுபான்மையினர் பாஜகவுக்கு வாக்களிப்பார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x