Published : 06 Jul 2018 01:49 PM
Last Updated : 06 Jul 2018 01:49 PM
பைக்கில் வந்து கொலை செய்ய முயன்றவர்களின் துப்பாக்கிச் சூட்டிலிருந்து ஜெயிலர் தப்பி உயிர்பிழைத்த சம்பவம், எரவாடா சிறை வளாகத்தில் இன்று காலை நடந்துள்ளது.
இதுகுறித்து ஒரு மூத்த காவல்துறை அதிகாரி தெரிவிக்கையில், ''எரவாடா மத்தியச் சிறைச்சாலையின் ஜெயிலராக பணிபுரிந்து வருபவர் மோகன் பாட்டீல் (40), இவரை குறிவைத்து இன்று ஒரு கும்பல் கொல்ல சதி செய்திருந்தது. ஆனால் எந்த காயமுமின்றி அதிலிருந்து அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
தாக்குதலில் ஈடுபட்டவர்கள் ஒரு பைக்கில் வந்தனர். அவர்கள் உதவி ஆய்வாளர் மோகன் பாட்டீல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். அவர் சிறை வளாகத்துக்குள் நுழைய முற்படும்போது இச்சம்பவம் நடைபெற்றது. இதில் அவர் எந்தவித காயமும் இன்றி உயிர் தப்பினார். அப்பகுதியில் இருந்து ஒரு காலியான துப்பாக்கியை நாங்கள் கண்டெடுத்தோம்.
இருவர் மீது கொலைமுயற்சி வழக்கு ஒன்றை நாங்கள் பதிவு செய்துள்ளோம். விரைவில், சிசிடிவி காமிரா பதிவுகள் மூலம் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அடையாளம் கண்டு கைது செய்வோம்.
இதற்கான காரணம் என்ன? இதற்குப் பின்னால் இருப்பது யார்யார் என்பது விரைவில் தெரியவரும்'' என எரவாடா சிறைச்சாலையைச் சேர்ந்த மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT