Published : 06 Jul 2018 08:35 AM
Last Updated : 06 Jul 2018 08:35 AM
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி, கடந்த ஜனவரி மாதம் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இது தொடர்பாக 8 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கு பஞ்சாப் மாநிலம் பதான்கோட் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவர் மட்டும் சிறுவர் என்பதால், அவர் மீதான விசாரணை கதுவா மாவட்ட சிறுவர் நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.
இந்நிலையில் குற்றம்சாட்டப்பட்ட மற்ற 7 பேரில், பர்வேஷ் குமார் (எ) மன்னு என்பவர் தன்னையும் சிறுவராக கருதி சிறுவர் நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என கோரினார். இதையடுத்து, அவரது எலும்பு சோதனை உள்ளிட்ட மருத்துவ பரிசோதனை நடத்த பதான்கோட் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி மருத்துவ அறிக்கை நீதிமன்றத்தில் கடந்த வாரம் சமர்ப்பிக்கப்பட்டது.
அதில் குமாருக்கு சுமார் 20 வயது இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, அவரை சிறுவனாகக் கருத முடியாது என்றும் வயதுக்கு வந்தவராகக் கருதி இந்த நீதிமன்றத்திலேயே விசாரணை நடத்தப்படும் என்று நீதிபதி ஜே.கே.சோப்ரா நேற்று உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT