Published : 30 Jun 2018 08:55 AM
Last Updated : 30 Jun 2018 08:55 AM
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள தமுனா கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதன்பேரில், நேற்று காலையில், அந்தப் பகுதியை ராணுவத்தினர் சுற்றி வளைத்தனர். அப்போது, அங்கிருந்த தீவிரவாதிகள், பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர்.
சுமார் ஒரு மணிநேரம் நடைபெற்ற இந்தத் துப்பாக்கிச் சண்டையில், 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தப்பியோடிய மற்ற தீவிரவாதிகளை தேடும் பணியில் ராணுவத்தினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதேபோல், குப்வாரா மாவட்டத்தில் உள்ள நேஹாம் வனப்பகுதியில் நடந்த மற்றொரு துப்பாக்கிச் சண்டையில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT