Published : 30 Jun 2018 08:48 AM
Last Updated : 30 Jun 2018 08:48 AM

வாஜ்பாயை நலம் விசாரித்தார் பிரதமர் மோடி

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயை பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக சந்தித்து நலம் விசாரித்தார்.

சிறுநீர்ப்பாதையில் தொற்று, மூச்சுத் திணறல் பிரச்சினைகளுக்காக முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த 11-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஏற்கெனவே இரண்டு முறை மருத்துவமனைக்குச் சென்ற பிரதமர் மோடி, அங்கு சிகிச்சை பெறும் வாஜ்பாயை சந்தித்து நலம் விசாரித்தார். இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவ வசதிகளை விரிவுபடுத்தும் திட்டத்தை தொடங்கிவைக்க நேற்று சென்ற பிரதமர் மோடி, மூன்றாவது முறையாக வாஜ்பாயை சந்தித்தார். அவரது உடல் நலம் குறித்து உறவினர்களிடமும் மருத்துவர்களிடமும் விசாரித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x