Published : 30 Jun 2018 08:27 AM
Last Updated : 30 Jun 2018 08:27 AM

லாலு பிரசாத்துக்கு 6 வாரங்களுக்கு ஜாமீன் நீட்டிப்பு

கால்நடை தீவன ஊழல் தொடர் பான 3 வழக்குகளில், ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு தண்டிக்கப்பட்டுள்ளார். ராஞ்சி மத்திய சிறையில் கடந்த ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி முதல் அவர் தண்டனை அனுபவித்து வந்தார். கடந்த மார்ச் மாதம் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

டெல்லி எய்ம்ஸ் மற்றும் ராஞ்சி ரிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். சிகிச்சையை தொடர லாலுவுக்கு ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் கடந்த மே 11-ம் தேதி 6 வாரங்களுக்கு தற்காலிக ஜாமீன் வழங்கியது. தற்போது இதனை நீட்டித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x