Published : 30 Jun 2018 08:26 AM
Last Updated : 30 Jun 2018 08:26 AM
டெல்லியில் ராணுவ மேஜராக பணியாற்றியவர் அமித் திவிவேதி. இவரது மனைவி ஷாயில்ஸா, டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுதொடர்பான விசாரணையில், அமித்தின் நண்பரும் ராணுவ மேஜருமான நிகில் ராய் ஹண்டா என்பவரே இக்கொலையை செய்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, மீரட்டில் பதுங்கியிருந்த அவரை போலீஸார் கைது செய்தனர். ஷாயில்ஸாவுடன் தமக்கு தகாத உறவு இருந்ததாகவும், அதனைத் தொடர அனுமதிக்காததால் அவரை கொலை செய்ததாகவும் மேஜர் நிகில் ராய் வாக்குமூலம் அளித்தார்.
இந்நிலையில், இந்த வழக்கானது, டெல்லி பெருநகர நீதிமன்ற நீதிபதி மனீஷா திரிபாதி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம்சாட்டப்பட்ட நிகில் ராய் ஹண்டாவை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT